Mr Ponnambalam Thavarajan (Rasan)
Deceased: 20 February 2024
யாழ். காரைநகர் பலகாடு நீலங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தவராஜன் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
அன்னார், பொன்னம்பல் (பரமானந்த சிவம்) - அன்னமுத்து தம்பதியினரின் மகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாலினி, விந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, மகேந்திரன் மற்றும் தவேந்திரன் (தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல் பக்கம்
www.tamilthakaval.org
