திருமதி. பொன்னம்பலம் விஜயலக்ஷ்மி

பொன்னம்பலம் விஜயலக்ஷ்மி

தோற்றம்: 19 செப்டம்பர் 1943 - மறைவு: 03 ஜனவரி 2025

கிளிநொச்சி - ஆனையிறவை பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டினை [லக்ஸ்மி அக்கடமி] வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் விஜயலட்சுமி அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று எல்லாம் வல்லவனின் பாதக்கமலங்களினை சரணடைந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற மார்க்கண்டு [ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர்-(மார்க்கண்டு விதானையார்)] - நாகம்மா தபதியினரின் அன்பு மகளும்,

திரு. திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம் [ஒய்வு நிலை தபால் உத்தியோகத்தர்] அவர்களின் அன்புத் துணைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00​ மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2025 05:00)