திரு. பொன்னம்பலம் குணபாலசுந்தரம்
தோற்றம்: 30 மார்ச் 1955 - மறைவு: 04 ஜூலை 2022
யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்கிளாய், பிரான்ஸ் Strasbourg, Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுதா, ஜெனி, சுதாகர், வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசிதரன், பாலச்சந்திரன், வாணி, விதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரத்தி, வானதி, பாரதி, அருண், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவபாலசுந்தரம், கருணபாலசுந்தரம், தர்மபாலசுந்தரம், இரட்சகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலட்சுமி, மீனலோஜினி அனுஷா, வசந்தகுமார், சிறிகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கோனேசலிங்கம் அவர்களின் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 13-07-2022ம் திகதி புதன்கிழமை மு.ப 09.00 மணியளவில் நடைபெற்று Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
