திரு பொன்னையா பத்மநாதன்

(ஓய்வுபெற்ற அதிபர் - யாழ் கொக்குவில் நாமகள் வித்தியாலயம்))

பொன்னையா பத்மநாதன்

தோற்றம்: 06 பெப்ரவரி 1950 - மறைவு: 17 அக்டோபர் 2019

வசாவிளானைப்பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வதிவிட மாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள்

நேற்று (17.10.2019) வியாழக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா-லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பர்னாந்து - விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேக்கிளா சுசீலாவின் (ஓய்வு பெற்ற ஆசிரியர் - யாழ். கோண்டாவில் இராமகிருஸ்ணா மகாவித்தியாலம்,
யாழ். முத்துத்தம்பி மகாவித்தியாலயம்) அன்புக் கணவரும்,

பத்மராஜா (Switzerland), பத்மகாந்த் (நில அளவையாளர் NEM), பத்மானந்த் (Canada), பத்மதனுஷாந்த் (சட்ட மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மிலோர்த்தி மற்றும் சாமிளா, டனோசனா (உதவிப் பதிவாளர், வவுனியா வளாகம் - யாழ். பல்கலைக்கழகம்) அனுசியா (Canada) ஷாளினி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரத்தினம், சதானந்தன், காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்னேஸ், இஸ்ரெல்லா, லெனாட், காலஞ்சென்றவர்களான லியோன், எட்மன்ட் மற்றும் பத்திமா, பர்னாந்து புளோரன்ஸ் (ஆசிரியர்- புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிநாத், (யாழ்.பரியோவான் கல்லூரி - 6), ஆதர்சனன், ருஸ்விதா, நிகேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (18.10.2019) வெள்ளிக் கிழமை பி.ப 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

நெசவுசாலை ஒழுங்கை,
இருபாலை வீதி,
கோண்டாவில் கிழக்கு, 
கோண்டாவில்.

தகவல் :
 
குடும்பத்தினர் 
 
+9477 603 2164, +94 77 231 3185

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2019 02:27)