Mr. Ponniah Rajagobal
Date of Birth: 28 July 1948 - Deceased: 29 October 2025
யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மணல்தரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராஜகோபால் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ராஜி) அவர்களின் துணைவரும்,
காலஞ்சென்றவர்களான காந்தியம்மா சாமிநாதன், யோகம்மா சேனாதிராஜா மற்றும் தவமணி கனகசுந்தரம் (கனடா), இராசபூபதி சின்னராசா (இங்கிலாந்து), காலஞ்சென்ற அஞ்சுதமலர், சுகிர்தமலர் அரியரத்தினம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று நல்லூரில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
