திரு. பொன்னையா செல்வரத்தினம்

(ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர், சுன்னாகம்)

பொன்னையா செல்வரத்தினம்

தோற்றம்: 11 ஜூன் 1942 - மறைவு: 22 டிசம்பர் 2022

யாழ். சுன்னாகம் உடுவில் டச்சுவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வரத்தினம் அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று வத்தளையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தர்மரத்தினம், சீவரத்தினம், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்னசிங்கம், இராசலட்சுமி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

சுபாஜினி (ஜேர்மனி), சுபாகரன் (சுவிஸ்), சுதாஜினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயணன் (ஜேர்மனி), தாரணி (சுவிஸ்), லகீந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,

அக்‌ஷய்(ஜேர்மனி), அக்‌ஷயா(ஜேர்மனி), சந்தோஷ், சதுஷன், ரதுக்சன், தனுக்சன்(சுவிஸ்), நிதர்ஷனா, மதுஷனா, அருட்ஷயன்(சுவிஸ்) ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:43 மணிமுதல் பி.ப 01:08 மணிவரை 28/10 1st Lane Shanthi Road Hendala Wattala எனும் முகவரியில் நடைபெறும் பின்னர் கெரவலப்பிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2022 03:11)