திரு. பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் (அப்பன், பாலா)
தோற்றம்: 16 ஜூலை 1959 - மறைவு: 30 ஜனவரி 2021
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தங்கம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
நித்தியகலா(நித்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிரிதாஷ், றஜிதா, காலஞ்சென்ற ஜீர்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஸ்கண்ணா, சிவசங்கரி, தனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அலிஷா, நித்தியா, அகிஷா, அஜய், ஆகிஷா, ரோஷித், ஹனித்தா, மேகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராஜேஸ்வரி, கமலநாயகி, செல்வராசா(துரை), கோணேஸ்வரி(நீர்வேலி), தனபாலசிங்கம்(கிளி- கனடா), இராசேந்திரம்(ராசா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், குணசேகரம், கலாநிதி, காலஞ்சென்ற ஞானசேகரம், கலாவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
www.tamilthakaval.org
