Mr. Ponnuthurai Shanmuganathan
Deceased: 15 December 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மூத்தவிநாயகர் கோவிலடி, ஆனைக்கோட்டை மற்றும் கம்மாலை வீதி, சண்டிலிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சண்முகநாதன் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - தங்கம்மா தம்பதியினரின் மூத்தபுதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
புஸ்பராணி (சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,
மாலினி, மயூரன் (RDHS- Office - Jaffna), மதியழகன், மகிஜா (France) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவிதன், சந்திரரஜனி (DGH - Kilinochchi), யாழினி, சுதாகரன் (France) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றிசானா, விதுசனா, றுசாந்தன், டஸ்மிதா, டனுத்ரா, நிவேத்திரா, ஜோதினி, பிரவீன், நகிர்ஜன், வர்சா, இனிசா ஆகியோரின் பேரனும்,
பத்மநாதன் (குட்டி), காலஞ்சென்ற இராமநாதன் (பவுண்) மற்றும் ஜெகநாதன் (கிளி), காலஞ்சென்ற திலகநாதன் (ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி, யோகமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
கம்மாலை வீதி, சண்டிலிப்பாய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
