திரு. பொன்னுத்துரை சிவபாலன் (மொரட்டுவ பாலன்)
தோற்றம்: 19 ஜூன் 1956 - மறைவு: 22 ஆகஸ்ட் 2024
யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மொரட்டுவ பிரபல வர்த்தகர் பொன்னுத்துரை - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பரிமளம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்திரி, அச்சுதன், அற்புதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காண்டீபனின் அன்பு மாமனாரும்,
ஆதிரன், சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கலாநிதி (கலா), சிவசோதி (சிவா), சிவராசன் (ராசன்), சிவகுமார் (கிளி), சிவானந்தன் (ஆனந்தன்), தயாநிதி(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற டொக்டர் தர்மலிங்கம், வள்ளி நாயகி, விக்கினேஸ்வரி (பேபி) புஸ்பராணி, விக்கினேஸ்வரி, திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் காரைநகர் ஆயிலி இல்லத்தில் 25 -08-2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று காலை 10.00 மணியளவில் புகழுடல் சம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
