Mrs. Pooranam Shanmughanathan
Date of Birth: 08 October 1940 - Deceased: 14 December 2025
நுவரெலியா - இல-07, கெலேகாலையைப் பிறப்பிடமாகவும், இல-6A, இரண்டாம் குறுக்குத்தெரு, இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் சண்முகநாதன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆவடையார் - பேச்சம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வசுந்தராதேவி, ஜெயக்குமார், சூரியகுமாரி, நளினி (இலண்டன்), சுவர்ணராணி, அஜந்தினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பகிரதன், நாளக்க (இலண்டன்), செல்வமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷன் (இலண்டன்), மதுஷன், விஹாசினி, ருஷாந்தன், யாதனா (இலண்டன்), யாதவ் (இலண்டன்) ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,
ஆரோஹணா (இலண்டன்), அநேகன் (இலண்டன்) ஆகியோரின் பூட்டியும்,
விஜயலட்சுமி, இந்திராணி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கமலாம்பாள், கணபதி, ராஜரட்ணம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2025 திங்கட்கிழமை முதல் இரத்மலானையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-12-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் அத்திட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
