செல்வி. பிரபாகலேந்திரன் சுஜீனா

பிரபாகலேந்திரன் சுஜீனா

தோற்றம்: 08 செப்டம்பர் 2009 - மறைவு: 07 டிசம்பர் 2024

இலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. பிரபாகலேந்திரன் சுஜீனா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிரபாகலேந்திரன்-கனுஷா தம்பதியினரின் அன்பு மகளும்,

அக்ஷனின் அன்புச் சகோதரியும்,

சின்னவி-மணி மற்றும் கணேசன்-இராஜபூபதி தம்பதியினரின் பாசமிகு பேத்தியும்,

தெய்வேந்திரம்-செல்வி (ஜேர்மனி), ரவிதீஸ்-ஜீவா (இலண்டன்), பற்குலேந்திரன்-சிவறாஜினி, பிரபு-ஜென்ஷா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

துரைசிங்கம்-யசோதா, அற்புதராஜா-வசந்தா (ஜேர்மனி), மயூதரன்-ராதா (ஜேர்மனி), கௌஜியாந்-கனோஜமதி (லண்டன்), பிரதீப்ராவ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

றஜீவன், நிறோஜன், சந்துரு, லாவண்யா, அமிஷா, அஞ்சனா, சுயாந், நிதுஜா ஆகியோரின் மைத்துனியும்,

ஆகாஸ், நிலக்ஷன், கோகுல், சிநேகா, மானுஷா, லினுஷன், ஸ்ரெலினா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,

ஆலியாவின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணியளவில் (இலண்டன் நேரம் முற்பகல் 10.00 மணி), இலண்டனில் நடைபெறும். இந் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு மூலமாக செல்வநகர் நாவற்குழி வடக்கு கைதடியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வையிட முடியும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

செல்வநகர்,

நாவற்குழி வடக்கு, கைதடி.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)