திருமதி. பிரபாலினி வரதராஜன்
மறைவு: 21 மார்ச் 2021
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாலினி வரதராஜன் அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வரதராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
உமையாள்(மருத்துவபீட மாணவி பங்களாதேஸ்) அவர்களின் ஆருயிர் அம்மாவும்,
சுபாஸ்கரன் (பிரான்ஸ்), சுரேஸ்கரன் (நோர்வே), சுதேஸ்கரன் (ஆசிரியர் யா/மீசாலை விக்னேஸ்வரா ம.வி), சுபாலினி (ஆசிரிய ஆலோசகர் வவு வடக்கு வலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திலகவதி ராஜலக்ஸ்மி, சாந்தநாயகி, கமலாம்பிகை (லண்டன்), புவனேஸ்வி (ஆசிரியை யா/ வல்லார்தெற்குஸ்ரீவிக்னேஸ்வராவி), லதா (பிரான்ஸ்), திலகா (நோர்வே), க.தேவரதி (பிரதி அதிபர் யா/டிறிபேக் கல்லூரி சாவகச்சேரி), வசந்தகுமார் (தபாலகம் வவுனியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
