Mr. Premkumar Arunasalampillai
Date of Birth: 09 October 1961 - Deceased: 09 November 2025
யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் (முன்னாள் பிரதம தபால் அதிபர் - யாழ்ப்பாணம்) - திலகவதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா - வள்ளியம்மா தம்பதியினரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை (முன்னாள் தபால் அதிபர் - கொழும்பு) - சரஸ்வதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
மகாலிங்கம் - திலகம்மா (வவுனியா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரி (சுகி-வவுனியா), வசந்தலோயினி (வவுனியா), சந்திரன் (வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
