திரு. புண்ணியமூர்த்தி ஸ்ரீவிக்கினேஸ்வரன்
(இளைப்பாறிய காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி, தர்மகர்த்தா - வட்டு வடக்கு பிரம்மனாச்சிதோட்ட கற்பகப் பிள்ளையார் தேவஸ்தானம், செயலாளர் - சிவபூமி அறக்கட்டளை)
தோற்றம்: 16 டிசம்பர் 1955 - மறைவு: 18 செப்டம்பர் 2025
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புண்ணியமூர்த்தி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி - சுகிர்தமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - போதனா வைத்தியசாலை), உமாசுதன் (சுற்றாடல் அதிகாரி - மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரென்சிலா (ஆராய்ச்சி உத்தியோகத்தர் - கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீனிவாசன், ஸ்ரீசரவணபவன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலேந்திரா, மற்றும் நிமலவேணி நடராசா, கமலவதனி தவபாலன், ஆறுமுகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை காலை 07:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
மூளாய், சுழிபுரம்
யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
