Mrs. Pushparajavathy Sinniah
(Retired Principal and Lecturer - National Institute of Education)
Date of Birth: 05 January 1938 - Deceased: 17 May 2022
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராஜவதி சின்னையா அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிதம்பரப்பிள்ளை இராஜரட்ணம் (ஓய்வுபெற்ற அதிபர், பிரபல சித்த வைத்தியர் வேலணை), உருக்குமணி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷா, Dr. கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பதிலகவதி கணேசலிங்கம்(புஷ்பா- ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர், தென்மராட்சி), புஷ்பரட்ணவதி மற்றும் பேராசிரியர் சிவசந்திரன்(முன்னாள் கலைப்பீடாதிபதி- யாழ். பல்கலைகழகம்), இராசமலர்(சோதி- முன்னாள் ஆசிரியை, வேலணை மத்திய கல்லூரி, In-Service Advisor, Education), சிவமலர்(முன்னாள் உப அதிபர்), காலஞ்சென்ற பாலசந்திரன்(முன்னாள் வங்கி முகாமையாளர்) , ஜெயசந்திரன்(முன்னாள் இலங்கை கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளார்) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
ரவிக்குமார், Dr. சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
சேஷன், அரன், ஸ்வரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
