திருமதி. புஸ்பராணி தியாகலிங்கம்
தோற்றம்: 06 மார்ச் 1939 - மறைவு: 16 ஜனவரி 2022
யாழ். போயிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி தியாகலிங்கம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகாந்தா, பராசக்தி, உஷாராணி ஆகியோரின் அருமை தாயாரும்,
வன் கோம்பெல், பீட்டர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாராணி ரமணானந்தன், இந்திராணி ராஜரத்தினம், கணேச செல்வம் (போயிட்டி), காலஞ்சென்றவர்களான தனபாலகுமார், கனகசேகரன் மற்றும் பத்மநாதன், பத்மராணி தம்பாப்பிள்ளை ஆகியோரின் அருமை சகோதரியும்,
ரமணானந்தன், ராஜரத்தினம், சிவஞானரஞ்சிதம் கணேசசெல்வம், தேவகி தனபாலகுமார், ரஞ்சி கனகசேகரன், தம்பாப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி செல்லையா, சங்கரப்பிள்ளை, நமசிவாயகம், சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
திரஷ்டன், ரொஷான், ஸ்டீபன், சிமோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
