திருமதி. புவனேஸ்வரி நடராஜன்
தோற்றம்: 11 அக்டோபர் 1958 - மறைவு: 15 அக்டோபர் 2025
மாத்தளை - இரத்தோட்டை எலகலயைப் பிறப்பிடமாகவும், இல-17A, ஆற்றங்கரை வீதி, களுதாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி நடராஜன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - லக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும்,
தேவன் - சின்னழகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நடராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலராஜன் (ஜனா லங்கா எலக்ரிகல், மாத்தளை), உதயகுமார் (ஒமேக எலக்ரிகல், கண்டி), கணேசராஜன், பவிந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
திஷாந்தி, ஜரனியா, நித்தியஶ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணகுமார் (ஹட்டன்), பிரகாஷம்பிள்ளை மற்றும் குமாரதாஸ் (ஸ்டார் எலக்ரிகல், கண்டி) ஆகியோரின் சகோதரியும்,
பிரதிக்ஷா, சஸ்விகா, சவிதா, ஜஸ்வின் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களுதாவளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
