திருமதி. புவனேஸ்வரி (பூபதி) இளையதம்பி
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1936 - மறைவு: 01 ஏப்ரல் 2024
யாழ். பண்டத்தரிப்பு, அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி இளையதம்பி அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, நடராசா, பாக்கியம், இலட்சுமணசாமி மற்றும் தியாகராசா (கனடா), கந்தசாமி (இலங்கை), மனோகரன் (அவுஸ்திரேலியா), இராஜமனோகரி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
கணேசமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி, மற்றும் நந்தினி (கனடா), கிருபாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேவதி, ராசாத்தி, ஜெயக்குமார், சியாமளா, விக்னேஸ்வரி, கவிதா ஆகியோரின் மாமியும்,
கஜன், ரிஷி, அருண், கீர்த்தனா, கெதுஷன், தீபிகா, கோபின், நவீன், சியாகரன், ஜிந்துயா, தன்சுயா, கிஷாந், கபில்ராஜ், யதுசாந், அலிசா, கஜனி, குபேரி, வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியா,மாயா, ஜியா, ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org