திருமதி. புவனேஸ்வரி மகேந்திரா (மணி)
தோற்றம்: 25 ஜூன் 1940 - மறைவு: 18 ஜனவரி 2026
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை மற்றும் மொரட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி மகேந்திரா அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 85வது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
திரு. வேலுப்பிள்ளை மகேந்திரா (இளையபிள்ளை வரதராஜர் – KKS சீமெந்து தொழிற்சாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா, சுரபி, காலஞ்சென்ற அமலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீப் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெனீசா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் (1st Floor) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
