Mr. R. Rajasegaran MJF JP
(விவாகப்பதிவாளர், விக்ரம் பிறிண்டர்ஸ் - உரிமையாளர்)
Date of Birth: 30 May 1958 - Deceased: 20 August 2024
கொழும்பு-13 கன்னாரத்தெருவைப் பிறப்பிடமாகவும், மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆர். ராஜசேகரன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாா், காலஞ்சென்றவர்களான ராமசாமிப்பிள்ளை-புஷ்பம் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான அருள் பர்னாந்து-தெரேசம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
ஹெலன் குமாரி அவர்களின் அன்புக்கணவரும்,
விக்ரம், கார்த்திகா ஆகியோரின் தந்தையும்,
நிஷாந்தினி, திவாகரன் ஆகியோரின் மாமனாரும்,
யோகித் இன் பாட்டனாரும்,
காலஞ்சென்ற முத்துசாமி, சண்முகசுந்தரி, ராமலெட்சுமி, காலஞ்சென்ற சொர்ணலெட்சுமி, மோகனசுந்தரி, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம்-மேரி பற்றிமா, பரந்தாமன் நாயுடு-பத்மாவதி ஆகியோரின் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
