திருமதி. இராசரத்தினம் மாணிக்கம்
தோற்றம்: 04 டிசம்பர் 1937 - மறைவு: 19 மார்ச் 2024
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு நாவற்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராரத்தினம் மாணிக்கம் அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சினி, இரவீந்திரன், சிறீதரன், மனோகரன், நிருபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாதசுந்தரம், இராஜிமதி, ஹேம்சீலி, குலேந்திரமாலா, தனராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, சின்னத்தங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
மயூரன், தினேசன் - கார்த்திகா, மாதங்கி - ஜெயகாந், பிருந்தினி - கவிபரன், டிஷாந் - நிவாசினி, கிரிஷாந், பவித்திரன், வித்தாரன், அக்சயா, வினோத், விஜித், ஜனனி, வர்சனா, விஷ்மிதா, வினுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கஜீபனா, கஷ்விகா, கனிஷ்கா, காஷ்மியா, நேத்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
