Mr. Ragunathan Aarumugam
Deceased: 01 May 2024
இந்தியா, திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் ரகுநாதன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று மாலை 7.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ம. ஆறுமுகம் (நந்தன் பிரின்டர்ஸ்-கண்டி) - மஹேஸ்வரி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றர்வகளான தியாகராஜன் - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,
சந்த்ரிகா அவர்களின் கணவரும்,
பிரியங்காவின் தகப்பனாரும்,
ரா.பிரசாந்தின் மாமனாரும்,
திரென், அஹானா ஆகியோரின் தாத்தாவும்,
நிர்மலாதேவி, நிரஞ்சலாதேவி ஆகியோரின் சகோதரரும்,
தியாகராஜாவின் மைத்துனரும்,
ராமன்- தமயந்தி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
Prime Paragon Residences
96/3B, Sri Somaratna Mawatha,
Bellanwila,
Dehiwala.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
