திரு இராஜதுரை சிறிதரன்

(முன்னாள் முகாமையாளர்-State Bank of India)

இராஜதுரை சிறிதரன்

தோற்றம்: 16 ஜனவரி 1955 - மறைவு: 31 டிசம்பர் 2023

தும்பளை திகிரி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜதுரை சிறிதரன் அவர்கள் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தபாலதிபர் இராஜதுரை-சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற Dr. திருநாவுக்கரசு - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. ஜலஜா அவர்களின் அன்புக் கணவரும்,

தமயந்தி, ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன், சுபேந்திரன், மாலதி, பாமதி, ரதி, சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

உதயகுமார், திருமணி, நிர்மலா, விஜயகுமார், தேவகுமார், சியாமளா, வற்சலா, ரேணுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-01-2024 இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03-01-2024 நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று. காலை 11.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2024 05:00)