திருமதி ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை (குமாரி)
தோற்றம்: 29 செப்டம்பர் 1946 - மறைவு: 25 ஜனவரி 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை (குமாரி) அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா - செல்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் மருமகளும்,
வேலுப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரத்னகுமாரி (லண்டன்), ரட்ணராஜா (லண்டன்), செல்வகுமாரி (கனடா), சாந்திகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ஜீவேந்திரம்பிள்ளை, புவனேந்திரம்பிள்ளை, இந்திராவதி ஆகியோரின் மைத்துனியும்,
Jackson, Quinn ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிமுதல் Richard Challoner School Hall, New Malden, KT2 5PA இல் இந்து சமய கலாசார முறைப்படி ஆரம்பமாகி முற்பகல் 11.15 மணியளவில் North East Surrey Crematorium, Lower Mordem, SM4 4NU இல் அடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
