திருமதி. இராஜலிங்கம் சந்திரகுமாரி
தோற்றம்: 21 டிசம்பர் 1954 - மறைவு: 31 மார்ச் 2024
ராகலையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜலிங்கம் சந்திரகுமாரி அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரராஜ் (மகேன்), மனோராஜ், நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலர்வதானா, ரகுநாத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் 03-04-2024 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org