திரு. இராஜதுரை இரட்ணேஸ்வரன்

(உரிமையாளர்- பிள்ளையார் இன்/ பிள்ளையார் ஸ்ரோர்ஸ்)

இராஜதுரை இரட்ணேஸ்வரன்

தோற்றம்: 04 செப்டம்பர் 1960 - மறைவு: 22 மே 2024

இல-31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர்மாடி கொழும்பு-05 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜதுரை இரட்ணேஸ்வரன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று அவரது யாழ்ப்பாண இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை (பிள்ளையார் விலாஸ் ஸ்தாபகர்)-சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஞானச்சந்திரன் (நீதிபதி மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் - முல்லைத்தீவு)-சரோஜினிதேவி தம்பதியினரின் மருமகனும்,

அமுதினி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரியங்கா, மயூரிப்பிரியா, காவியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜய் அபிநந்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இரஞ்சிதமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, காலஞ்சென்ற சாந்தநாயகி, வதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நாகராஜா, சிவதாசன், தனஞ்செயன், இரட்ணசோதி, சற்குணேஸ்வரன், சுபோதினி, நளாயினி, ரஜினி, கேதீஸ், அரவிந்தன், சுரேஸ்குமார், விக்னபாலன், சுரேந்திரன், பிரதீபன், ரிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அவரது இல-31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாண இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2024 04:00)