திரு. இராஜவரோதயம் சம்பந்தன்

Mr. Rajavarothayam Sampathan

(திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்)

(Member of Parliament for Trincomalee)

இராஜவரோதயம் சம்பந்தன்

தோற்றம்: 05 பெப்ரவரி 1933 - மறைவு: 30 ஜூன் 2024

Date of Birth: 05 February 1933 - Deceased: 30 June 2024

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.

அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் ஆவார்.

பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.

அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள் அவரது இல்லத்தில் வந்து சந்தித்து போவார்கள்.

தனது காலத்தில் அரசியல் தீர்வை பெற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவர் னால் அது கை கூடவில்லை என்பது மிக கவலையாகும்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்திரு. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள் தனது 91 ஆவது வயதில் இன்று (30.06.2024) இரவு 9 மணியளவில் காலமானார். எனது உறவினர் திரு. றோய் அவர்கள் மூலம் அறிந்த போதும், திருக்கோணேஸ்வரத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி திரு. திவாகரன் அவர்கள் செய்தி உண்மையா என்று கேட்ட போதும், குழம்பிய மனநிலையோடு...அவரது பாதுகாவலர் திரு. ஸ்ரீரத்தினம் அவர்களுடன் பேசி அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தில் 2010லிருந்து தொண்டாற்றத் தொடங்கியதிலிருந்து ஐயா அவர்களை பல தடவைகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சிறியேனுக்குக் கிடைத்தது. 
 
ஐயா அவர்கள், அரசியலைத் தாண்டி, சிறந்த வழக்கறிஞராகவும், மிகுந்த பக்திமானாகவும் திகழ்ந்தார்.
 
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் "திட்ட வரைவை" (யாப்பு - Constitution) உருவாக்கிய மூவரில் ஐயாவும் ஒருவர்.
 
ஆலயம் சார்ந்த தொல்பொருள் பிரச்சனைகளை அவரோடு பேசிய போது...தொல்பொருள் பணிப்பாளர், அமைச்சர் ஆகியோரோடு உடனேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொழும்பில் கலந்து பேச  ஒழுங்கு செய்து, என்னையும் தரவுகளோடு வரச் சொன்னார்.
 
பிரச்சனைகளை  ஐயா அவர்கள் தனது கணீர் குரலில் விபரமாக எடுத்துக் கூறியதையும்,  நான் சில சந்தர்ப்பங்களில்  உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகையில், என்னை அவர் சாந்தப்படுத்தியதையும்  இன்றும் நினைவு கூர்கிறேன். 
 
தொலைபேசியில் அடிக்கடி பேசி நிலைமைகளை அறிந்து கொள்வார்.
 
அவரது இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
 
ஐயாவின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்திருக்கும்
 
அமைதியான சுபாவமும். கண்ணியமும், பக்தியும் நிறைந்த அன்பு மகன் சஞ்ஜீவன் அவர்களும்,
 
ஐயா அவர்களின் அன்பு மனைவியும் மகளும் விரைவாக ஆறுதல் அடையவும்,
 
அமரர் ஐயாவின் ஆத்மா   கோணேசர்  பெருமானின் அருட்பாதங்களில் இணைந்து சாந்தி பெறவும் நெஞ்சம் நெகிழ்ந்து பிரார்த்திக்கிறேன்.
 
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி.
அன்பே சிவம்.
அன்பே சிவம்.
அன்பே சிவம்.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2024 04:33)