Mr. Rajendrakumar Ganesarajah
Date of Birth: 03 August 1963 - Deceased: 12 July 2025
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரகுமார் கணேஷராஜா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேஷராஜா - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஷமயூரனின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி செல்வலக்ஷ்மியின் அன்புத் தம்பியும்,
உஷா - இராஜமனோகரியின் (அமெரிக்கா) அண்ணனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-07-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் இல- 71/9, Barnes Place, Colombo-07 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
