திருமதி. இராஜேந்திரம் வடிவாம்பிகை (அக்கம்மா)

இராஜேந்திரம் வடிவாம்பிகை (அக்கம்மா)

தோற்றம்: 22 மே 1947 - மறைவு: 06 ஜூன் 2026

திருகோணமலை - காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரம் வடிவாம்பிகை அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு - நாகம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, சரஸ்வதி, வடிவேலு, துரைராஜசிங்கம், காலஞ்சென்ற தணிகாசலம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ், ராணி, பாலசுப்பிரமணியம், வீரசிங்கம், வசந்தகோகிலம், காலஞ்சென்ற நிர்மலாதேவி, காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, புஷ்பராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06- 2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2026 00:00)