திரு. இராஜேஸ்வரன் தர்மேந்திரா (தர்மா)
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1976 - மறைவு: 07 மார்ச் 2024
யாழ். அராலி மத்தி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராஜேஸ்வரன் தர்மேந்திரா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று சென்னையில் சிவபதப்பேறு பெற்றார்.
அன்னார, காலஞ்சென்ற சந்திரசேகரம் பெஞ்சமின் - புஸ்பம் சோதிமணி தம்பதியினரினதும்,
காலஞ்சென்ற சின்னையா - நல்லம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜனார்த்தனி, ஜயந்தினி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
கிருஷசணபாலன், சத்தியேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றவீன், மயூரிக்கா, வினுஷன், சஜின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-03-2024 புதன்கிழமை அன்று No-12, Navis Apartment Velmurugan Colony, Keelkatalai, Chennai 117, இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் முற்பகல் 10.15 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கீழ்க்கட்டளை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
