திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)
தோற்றம்: 05 ஏப்ரல் 1971 - மறைவு: 12 ஜூலை 2024
யாழ். மயிலிட்டி தாழையடி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் (குட்டித்தோம்பான்)-இராசமலர் ஆகியோரின் அன்பு மகளும்,
இராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிகா, யாழரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயராஜ் , விஜயராணி, துஷிராஜ் மற்றும் அமரர்களான ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
