திருமதி. இராஜேஸ்வரி கந்தையா
(ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியர்)
தோற்றம்: 03 செப்டம்பர் 1938 - மறைவு: 14 ஜூலை 2022
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் (கொடுவேலி விதானையார்) செல்லம்மா (முன்னாள் இலங்கையின் முதலாவது பெண் கிராமசங்கத் தலைவி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நாகேந்திரர் (கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாராணி (ஐக்கிய அமெரிக்கா), ஜயந்தி (கனடா), யோகேஸ்வரி (கனடா), நாகேந்திரா (டென்மார்க்), கலைவாணி (கனடா), திருமகள் (உருத்திரா- கனடா), கஜேந்திரா(கனடா), மலைமகள் (ஜனா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (கிராமசேவையாளர்), அமிர்தரட்ணராஜா (அதிபர்), இராமநாதர் (பொறியியலாளர்), செல்வரட்ணம் (எழுதுவினைஞர்) மற்றும் நாகேஸ்வரி (கிளி- முன்னாள் ஆசிரியர்), இராமச்சந்திரன் (முன்னாள் நெடுந்தீவு உப அரச அதிபர்), இலட்சுமணராஜா (முன்னாள் புதை பொருள் ஆராட்சியாளர், பத்திரிகையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நவயோகம், காலஞ்சென்ற முருகேசு ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜெயன் (தேன்) பிள்ளை, ஸ்ரீரஞ்சன், லோகேந்திரன் (K.V.செல்வன்), கஜபாலினி, இராஜ்மோகன், பஞ்சலிங்கம், மைதிலி, ரஜிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரவிவர்மன் (வருண்), சரண்யா, ஸாகித்தியா, ஜனகன், கார்த்திகன், கபிலன், கஜந் (நாகேந்திரர்), கஜனா (தேந்திரா), ஹரேந்திரா, ஸ்ரீமன், ஆதினி, பிரணவி, வர்ணவி, வாரணன், கவின், கஜானன், தாமிரா, சாய்மிரா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம் (ஆசிரியர்), அமிர்தம் மற்றும் அன்னலட்சுமி, ஞானாம்பிகை, யோகம்மா (முன்னாள் ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் (சமாதான நீதவான்), நாகபூசணி, கௌரி (ஆசிரியர்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
நாகம்மா, காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கண்மணி, பசுபதிப்பிள்ளை, பேரம்பலம், காமாட்சி, தனபாக்கியம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
