திரு. ராஜ்குமார் சின்னையா
தோற்றம்: 13 மே 1973 - மறைவு: 14 ஏப்ரல் 2021
யாழ். மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Vreden ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜ்குமார் சின்னையா அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்வமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகலிங்கம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜி அவர்களின் அன்புக் கணவரும்,
பவி, தர்ணிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜனி (சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
