திருமதி. ராஜ்குமார் கீர்த்தனா
தோற்றம்: 24 நவம்பர் 1999 - மறைவு: 29 நவம்பர் 2024
யாழ். வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜ்குமார் கீர்த்தனா அவர்கள் வெள்ளிக்கிழமை 29-11-2024 அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை-தனுஷ்கோடி (தவமணி) தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஜப்பான் துரை)-இரத்தினகாந்தி தம்பதியினர் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்ற ரவீந்திரதாஸ்-கோமதி தம்பதியினரின் அன்பு மகளும்
வசந்த், துஷ்யந்த் ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
ராஜ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்வந்த், அட்சை, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-12-2024 புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை Lotus Funeral & Cremation Centre Inc (121 Cityview Drive, Toronto, ON, M9W 5A8) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
