திருமதி. இராக்கினியம்மா இராசையா
மறைவு: 01 ஜூன் 2024
யாழ். மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், பாலாவி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராக்கினியம்மா இராசையா அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
மல்லிகா, பூலோகராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பராசா (புஸ்பன்), நேசராசா (நேசன்), யோகராசா (யோகன்) மற்றும் இளங்கநாயகி, யோகமலர்(மங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
