Mrs. Ramaiaya Naidu Rukmani

Ramaiaya Naidu Rukmani

Date of Birth: 28 July 1939 - Deceased: 20 June 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் கரட்டபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாவலப்பிட்டி பார்கேபில் கீழ்பிரிவை பிறப்பிடமாகவும், மோதரை - கொழும்பு 15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமையா நாயுடு ருக்மணி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், வெள்ளைச்சாமி நாயுடு - வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற ராமையா நாயுடு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராஜூ நாயுடு, ராமையா நாயுடு, கிருஸ்ணசாமி நாயுடு, அலமேலு, விசாலாட்சி ஆகியோரின் சகோதரியும்,

துரைசாமி நாயுடு, கெங்காதரன் நாயுடு (Ambiga Centre Pvt LTD, கொழும்பு), ரவிசந்திரன் நாயுடு (அபி ஸ்டோர்ஸ் - தியத்தலாவ),  ராஜேந்திரன் நாயுடு (பார்கேபில்), காலஞ்சென்ற கணேஸ், நாராயணசாமி நாயுடு (சங்கர் - அஜந்தா சென்டர்), சரோஜா (Gayans Textiles Pvt LTD - பண்டாரவளை) ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் (தியத்தலாவ), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஜோதி, ராஜேந்திரன் ஜோதி, நாராயணசாமி ஜோதி ஆகியோரின் மாமியாரும்,

ஜெகதீஸ்வரன் நாயுடு (AG Line Pvt LTD), சுதாகரன் (அவுஸ்திரேலியா), சுகுணா (தைபா), நந்தகுமார், கௌரி, காயத்ரி, உதயா, நிரோசனா பிரசாந், அபிலாஷ், சுபாசினி, நரேஸ்குமார் (The Glitter Holding Pvt LTD), ருக்சிகா ஆகியோரின் அவ்வாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2025 04:00)