திரு. இராமநாதன் பரராஜசிங்கம்
(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் தொலைத் தொடர்புத் திணைக்களம்)
தோற்றம்: 26 நவம்பர் 1937 - மறைவு: 23 ஜூன் 2023
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பரராஜசிங்கம் அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லெட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம், சிரேஸ்ட போதனாசிரியர் தொலைக்கல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாசினி (பிரான்ஸ்), சுதாசினி (கனடா), சுலோசினி (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாகாண திறைசேரி, வடக்கு மாகாணம்), குகானந்தன் (கனடா), நிர்சாந்தினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணிவண்ணன் (பிரான்ஸ்), உமாசுதன் (கனடா), சிவகுமாரன் (ஆசிரியர், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), நிலானி (கனடா), குகப்பிரியன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, பார்வதி, கிருஸ்ணபிள்ளை, புவனேஸ்வரி, தயாவதி மற்றும் திலகவதி, கிருஸ்ணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, மயில்வாகனம், குணரத்தினம், திருநாவுக்கரசு, செல்வராசா, முத்தையா, நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, சரஸ்வதி, நித்தியானந்தன் மற்றும் சரஸ்வதி, இளையதம்பி, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்ரன், கவித்ரன், சரண், ஆரணி, வான்கோ, சிவநயனி, நிலவு, பிறை, தணிகையன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
www.tamilthakaval.org
