Mr. Ramanathan Sivaramalingham
Date of Birth: 18 April 1950 - Deceased: 18 September 2025
யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநெச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் சிவராமலிங்கம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலாயுதம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராசா (இலண்டன்), கனகம்மா (வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி, குகதாஸ் (அஸ்வின் புகைப்பட கலையகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானதாசன் ஜெயச்சந்திரிக்கா (தரவு பதிவு இயக்குனர் - யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அஸ்வின் (கிளிநொச்சி ம.வி. மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 287/1, உதயநகர் மேற்கு,
கிளிநொச்சி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
