Mrs. Ramani Elpecz
Date of Birth: 17 February 1966 - Deceased: 01 October 2025
கொழும்பு - 13, ஜிந்துபிட்டி வீதியினைப் பிறப்பிடமாகவும், தெமட்டகொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கே.எம். ரமணி எல்பெக்ஸ் அவர்கள் 01-10-2025 கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கே. எம். மைக்கல் - ராணி தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற சகோ. எல்பெக்ஸ் அவர்களின் மனைவியும்,
ஜோ. சேம் பர்ணாந்து (ஆசிரியர்), ரெபேக்கா மலர் பர்ணாந்து ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஷெலோமி சேம் பர்ணாந்து (ஆசிரியை) அவர்களின் மாமியாரும்,
காலஞ்சென்ற ரஞ்சன், ரவீந்திரன், காலஞ்சென்ற ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 - 10.00 மணி வரையும், 03-10-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.00 - 3.00 மணி வரையும் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் சரீரம் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
