திரு. இராமசாமி நவரட்ணம்
தோற்றம்: 24 பெப்ரவரி 1948 - மறைவு: 16 ஜூலை 2024
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி நவரட்ணம் அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி-நல்லமுத்து தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-பகவதியம்மா தம்பதியினரின் மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், தங்கரத்திணம், நாகரத்தினம், கனகரத்தினம், இராசரத்தினம், சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சத்தியமூர்த்தி, நகுலேஸ்வரி, தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-136, சிலாபம் வீதி, நீர்கொழும்பிலுள்ள W.S.Fernanodo & Sons மலர்ச்சாலையில் 20-07-2024 சனிக்கிழமை முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
