திருமதி. ராமசாமிபிள்ளை சிவபாக்கியம் (மகேஸ்வரி)
தோற்றம்: 12 மார்ச் 1941 - மறைவு: 06 ஜூன் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் (கண்டி ரத்ன மாளிகை) காலஞ்சென்ற ராமசாமிபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சிவபாக்கியம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:15 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், தத்தமங்கலம் கிராமம் குருதெனிய காலஞ்சென்ற மாரிமுத்துபிள்ளை - தைலம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தேவிகாவின் அன்பு தாயாரும்,
முகுந்தனின் (ஆராதனா ஜீவலர்ஸ் - கண்டி) அன்பு மாமியாரும்,
ஸ்ரீதீபன், சிந்தூரி, ஷிவராம் ஆகியோரின் அம்மாயியும்,
பலகொல்ல சிவந்தலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - சிவபாக்கியம் (கலஹா) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் (இல-344/10, பேராதெனியா வீதி, கண்டி) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கண்டி மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
