திருமதி. இராமசந்திரன் புஸ்பராணி
தோற்றம்: 06 நவம்பர் 1947 - மறைவு: 09 டிசம்பர் 2023
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-05, பாரதி வீதி, கூமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராமச்சந்திரன் புஸ்பராணி அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு துணைவியாரும்,
தர்மகுணசிங்கம், திலகவதி, யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி (இந்தியா), நித்தியகல்யாணி (ஜேர்மனி), நவசோதி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற இராசநாயகம், செல்வநாயகம், காலஞ்சென்ற சதானந்தலட்சுமி, காலஞ்சென்ற வீரசிங்கம், காலஞ்சென்ற செல்வராசா, செல்வநாயகம் (ஜேர்மனி), சொக்கலிங்கம் (இந்தியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக நெடுங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
www.tamilthakaval.org
