திருமதி. இராமசந்திரன் புஸ்பராணி

இராமசந்திரன் புஸ்பராணி

தோற்றம்: 06 நவம்பர் 1947 - மறைவு: 09 டிசம்பர் 2023

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-05, பாரதி வீதி, கூமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராமச்சந்திரன் புஸ்பராணி அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு-முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு துணைவியாரும்,

தர்மகுணசிங்கம், திலகவதி, யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி (இந்தியா), நித்தியகல்யாணி (ஜேர்மனி), நவசோதி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற இராசநாயகம், செல்வநாயகம், காலஞ்சென்ற சதானந்தலட்சுமி, காலஞ்சென்ற வீரசிங்கம், காலஞ்சென்ற செல்வராசா, செல்வநாயகம் (ஜேர்மனி), சொக்கலிங்கம் (இந்தியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக நெடுங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

வீட்டு முகவரி:

இல-05, பாரதி வீதி,
கூமாங்குளம்,
வவுனியா.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2023 05:00)