திருமதி. ரேணுகாதேவி செல்லதுரை

ரேணுகாதேவி செல்லதுரை

தோற்றம்: 26 ஆகஸ்ட் 1959 - மறைவு: 11 செப்டம்பர் 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் T.களத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த திருமதி. ரேணுகாதேவி செல்லத்துரை அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற க.தங்கவேலுப்பிள்ளை-ஞானம்பாள் தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

திரு. செல்லத்துரை (Managinig Director-Emar Pharma (Pvt) Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயராணி, கிருத்திகா, அருனியா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

கோகுல் அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், கிருஷண் லீலா, லோகநாதன் மற்றும் பரமேஸ்வரி, பாலசுந்தரி, காலஞ்சென்றவர்களான யோகேஷ்வரி, தவராஜா மற்றும் மோகனசுந்தரம் ஆகியோரின் சகோதரியும்

பரமநாதன் (Rex Pharmacy), அருணாசலம், காலஞ்சென்ற தனலட்சுமி, கமலாதேவி, கணேஷன், நடராஜ், சரோஜா, நாகராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இல.41/23, பெபிலியான வீதி, நெதிமாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் "நிசல உயன" பொது மயானத்தில் (இல.95, அன்டர்சன் வீதி, களுபோவில, தெஹிவளை) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2024 04:00)