திரு. இராசா செல்வநாயகம்
தோற்றம்: 20 மே 1946 - மறைவு: 15 மே 2025
யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா செல்வநாயகம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா - மாணிக்கம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற இரத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் மைத்துனரும்,
தவேந்திரன், பிரதீபா, மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்தரூபி, மணிமாறன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியன், இலக்கியா, நிகேதன், தினேஸ், சங்கீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2025 வெள்ளிக்கிழமை காளி கோயிலடி, குப்பிளான் வடக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் குப்பிளான் கடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
