திரு. இராசா சிவபாதம்
(ஓய்வு பெற்ற இ.போ.ச நடத்துநர்)
தோற்றம்: 21 ஜூன் 1948 - மறைவு: 14 பெப்ரவரி 2025
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சிவபாதம் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா -சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு-பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
சமரக்கொடி (துரை) அவர்களின் அன்புக் கணவரும்,
வைகரி, தர்விகா, தீரஜன், நீரஜன் ஆகியோரின் அன்புக் தந்தையும்,
சுதாகரன், பிரதீபன், ஹம்சத்பிரியா, கஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரிணி, திலக்ஷன், வியோனன், டியானி, யாதவி, அஸ்வந், றியா, றிஷான் ஆகியோரின் அன்புக் தாத்தாவும்,
காலஞ்சென்ற சிவமணி மற்றும் சிவராணி, இன்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயலிங்கம், சுந்தரலிங்கம், சத்தியவிமலாதேவி, காலஞ்சென்றவர்களான சற்குணராணி, சத்தியேஸ்வரன் மற்றும் கமலேஸ்வரி காலஞ்சென்ற பிறேமநாதன் அபூர்வசூரியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனுசியா, கிஷாந், சோபிதா ஆகியோரின் தாய் மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பித்துரை, குகனேஸ்வரன் மங்களேஸ்வரி, ஸ்ரீபவானி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி நண்பகல் 12:00 மணியளவில் இலண்டனில் நடைபெறும். இறுதி அஞ்சலி பிரார்த்தனை அச்சுவேலி மத்திய கல்லூரி ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும்.
காலத்தின் சூழ்ச்சியால் எஙகளை
விட்டு பிரிந்தீர், ஆனால்
எங்கள் மனதில் இருந்து
பிரியவில்லை.
நீங்கா நினைவுகளுடன்
பிரிவினால் துயருறும்....
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
