Mr. Rasaiya Jegananthan (Rasa)
Date of Birth: 26 April 1968 - Deceased: 04 December 2024
யாழ். சரவணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாகவும், Épinay-sur-Seine - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா ஜெனந்தன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசையா-பரமேஸ்வரி தம்பதியினரின் செல்வப் புதல்வனும், நடராசா-இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜசிகா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராசா (தாய் மாமா) - செல்வராணி (மாமி) ஆகியோரின் மருமகனும்,
ஆனந்த ராணி, சித்திரா, வசந்தி, வாணி, காந்தன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
குமார், ஜீவன், ஶ்ரீ, கேசன், றெமோ, தீபா, விகுணன், உதயா, ரேனு, தீலிபன், கஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரையும், 12-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதலும் Crèmatorium des Joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
