திரு. இராசையா காந்தீபன் (தீபன்)

இராசையா காந்தீபன் (தீபன்)

மறைவு: 12 செப்டம்பர் 2024

யாழ். தெல்லிப்பளை ஓவசியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா காந்தீபன் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று தெல்லிப்பளையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துஷ்யந்தி இராமலிங்கம், தமயந்தி சுந்தரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண  மலர்ச்சாலையில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2024 04:00)