திரு. இராசையா பத்மநாதன்

இராசையா பத்மநாதன்

தோற்றம்: 02 ஜனவரி 1948 - மறைவு: 01 ஜூன் 2024

யாழ். கந்தரோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பத்மநாதன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்ற இராசையா - செல்லமுத்து தம்பதியினரின் இளைய புதல்வனும்,

காலஞ்சென்ற கனகசபை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாலயோகினி மற்றும் ஜெகதீஸ்வரி (யோகம்) ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் (கனடா), கனகரத்தினம், காலஞ்சென்ற பாலசிங்கம், மயில்வாகனம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சதோதானும்,

காலஞ்சென்ற மலர்விழி, பிரகலாதன் (சுவிஸ்), துவாரகா, ஜெயராம் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ரஞ்ஜிதமலர் (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

வதனா, காலஞ்சென்ற குலசிங்கம், சரோஜினி தேவி, புஸ்பராணி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 03-08-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக புகழுடல் கந்தரோடை சங்கபுலவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2024 04:00)