திரு. இராசையா சிறிஸ்கந்தராஜா
தோற்றம்: 18 மார்ச் 1967 - மறைவு: 16 செப்டம்பர் 2026
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசையா சிறிஸ்கந்தராஜா அவர்கள் 16-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தராஜா - பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
அனுசூயா அவர்களின் அன்புக் கணவரும்,
லதாங்கி (மருத்துவபீட மாணவி யாழ்ப்பாணம்), ரெரூஷன் (மாணவன், யாழ். இந்து கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணசிங்கம், காலஞ்சென்ற செல்வராஜா, கமலாதேவி (சுவிஸர்லாந்து) ஆகியோரின் சகோதரரும்,
அனந்தன் (இலண்டன்), அகிலன் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை வீதி, தாவடி தெற்கு, கொக்குவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 224 9522
www.tamilthakaval.org
