Mrs. Rasakulasingham Annapooranam
Deceased: 06 July 2025
வவுனியா வடக்கு குளவிசு, நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசகுலசிங்கம் அன்னபூரணம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் இளையமகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - பார்வதிப்பிள்ளைதம்பதிகயினரின் மருமகளும்,
இராசகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி (ஆசிரியை - நெளுக்குளம் கலைமகள் ம.வி), வனிதாமதி (இதழ் ஒலி ஓளி ஊடகம் - அமெரிக்கா), சுரேஸ்குமார் (சுவிஸ்), ரமேஸ்குமார் (ஆசிரியர்), விஜிதாமதி (முன்னாள் தாதிய உத்தியோகத்தர் - மந்திகை ஆதார வைத்தியசாலை யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நேமிநாதன் (ஆசிரியர்), வரதராஜா (மருத்துவர் - அமெரிக்கா), யசோதா (சுவிஸ்), துர்மலா (ஆசிரியை), சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறேகா, நிவேகா, டனுஸ்கா, கம்சிகன், கம்சிகா, கன்னிகா, வர்ணிகா, விதுரன், ரவினன், நர்த்தனன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது மகளின் இல்லத்தில் (நெளுக்குளம் பிரதேசசபை முன்பாக) நடைபெற்று, திருவுடல் குளவிசுட்டான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
